திருவாரூர், திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் ரூ.48 லட்சம் மோசடி செய்த கணக்காளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் வனச்சரக அலுவலக கணக்காளர் திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றியவர் சிவக்குமார். இவர் பணி மாறுதல் பெற்று தேனி மாவட்டத்திற்கு சென்றார். ரூ.48 லட்சம் மோசடி திருவாரூரில் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ததில், போலியான ஆவணங்கள் மற்றும் வங்கி முத்திரைகளை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.48 லட்சத்து 12 ஆயிரத்து 426 மோசடி செய்தது தெரிந்தது. வழக்குப்பதிவு இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvarur-rs48-lakh-fraud-at-forest-department-office-case-registered-against-accountant




