தென்காசி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காாரணமாக நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் கோட்டத்தில் கடையநல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (8.7.2026, புதன்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது என்று கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகர சுந்தரம் தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (8.7.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பால அருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம் பேட்டை கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-6




