அ.தி.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர் பால. நந்தகுமார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அடுத்த சில நாள்களிலேயே அவரிடமிருந்து பதவியைப் பறித்தார். அ.தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளராகப் பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்த கப்பச்சி வினோத் த.வெ.க-வில் இணைந்ததால் பால. நந்தகுமார் இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராகப் பதவிவகித்து வருகிறார். பால. நந்தகுமார் த.வெ.க அரசின் 100 நாள் ஆட்சி குறித்து தெரிவித்துள்ள அவர், "தேர்தல் நேரத்தில் பிரசார மேடைகளில் த.வெ.க பத்து சீட்டுகளுக்கு மேல் ஜெயித்தால் மீசையை எடுத்துக் கொள்கிறேன் எனச் சவால் விட்டிருந்தேன். மாயாஜாலம் ஏதோ செய்து 108 வாங்கி ஆட்சியும் அமைத்துவிட்டார்கள். 100 நாள் ஆட்சி நிறைவுற்ற பிறகு நண்பர்கள் சிலர் நினைவுபடுத்தியதைத் தொடர்ந்து நேற்று மீசையை எடுத்துக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டு புகைப்படங்களையும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தேர்தலில் த.வெ.க 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால் மீசையை மழித்துக் கொள்வேன் எனப் பிரசாரக் கூட்டங்களில் விடுத்த சவாலில் தோற்றதால் மீசையை மழித்துக் கொண்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளரின் செயல் கவனத்தை ஈர்த்து வருகிறது. ``தவெக-வின் 100 நாள் ஆட்சியில் 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்" - அப்பாவு காட்டம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/aiadmk-mache-shaves-off-his-moustache-after-losing-challenge-against-tvk




