சென்னை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) – சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் இன்று (23.07.2026) ரிப்பன் கட்டட வளாக அம்மா மாளிகை கலையரங்கத்தில் வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை குறித்து கட்டடவிற்பனையாளர்கள் (Promoters), வங்கியாளர்கள் (Bankers) மற்றும் நிதி நிறுவனங்களுக்கு (Financial Institutions) ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கவும், வருகையில்லா பதிவு முறையை செயல் விளக்க காட்சி (Demo) மூலம் விளக்கவும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வருகையில்லா ஆவணப்பதிவு இக்கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதனை மையமாக கொண்டு, பதிவுத்துறையில். இந்த வருகையில்லா ஆவணப் பதிவு தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தினைத் தொடங்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அரசு சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும், வெளிப்படையாகவும் வழங்கும் நோக்கில் இந்த அரசு அனைத்து துறைகளிலும் தகவல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் பதிவுத் துறையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு முன்னோடி சீர்திருத்தமாக “வருகையில்லா ஆவணப் பதிவு” நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தரம் மற்றும் செயல்திறன் முதற்கட்டமாக, மனை முதல் விற்பனை (First Sale of Plot) மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு முதல் விற்பனை (First Sale of Flat) ஆகிய இரண்டு வகை ஆவணங்களின் பதிவுகள் 17.08.2026 முதல் கட்டாயமாக வருகையில்லா ஆவணப் பதிவு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பதிவு செயல்முறை விரைவாகவும், வெளிப்படையாகவும், எளிமையாகவும் அமையும். இந்த நடைமுறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் பாதுகாப்பான முறையில் மின்னணு வடிவில் சம்பந்தப்பட்ட நபரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் பொதுமக்களின் நேரமும், பயணச் செலவும் குறைவதோடு, பதிவு செயல்முறையின் தரம் மற்றும் செயல்திறன் மேம்படும். புதிய நடைமுறை கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வங்கிகள் ஆகியோர் இந்த புதிய நடைமுறையின் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய நடைமுறை குறித்த விளக்கம், தேவையான ஆவணங்கள், மின்னணு சமர்ப்பிப்பு முறை, பதிவு செயல்முறையின் ஒவ்வொரு கட்டம் ஆகியவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவதுடன், நடைமுறை சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களும் அளிக்கப்படும். இதன்மூலம் பதிவு ஆவணங்களில் ஏற்படக்கூடிய பிழைகள் குறைந்து, பதிவு செயல்முறை மிகவும் செம்மையான முறையில் நடைபெற வழிவகுக்கும். இன்று வழங்கப்பட உள்ள பயிற்சியானது, புதிய நடைமுறையை முழுமையாகப் புரிந்து கொண்டு, பொதுமக்களுக்கு தரமான மற்றும் விரைவான சேவையை வழங்குவதற்கு கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், அரசின் பதிவுத் துறைக்கும், தனியார் துறைகளுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கும். அரசின் இந்த முன்னோடியான முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரின் முழுமையான ஒத்துழைப்பும் அவசியமாகும். இன்றைய நிகழ்ச்சியில் பெறப்படும் அறிவும், அனுபவமும் 17.08.2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய நடைமுறையை சிறப்பாக நடைமுறைப்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாடு அரசின், மக்கள் நலன் சார்ந்த இத்தகைய சீரிய முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., பத்திரப் பதிவுத்துறை தலைவர் திரு.ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப., கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/document-registration-without-physical-presence-consultative-meeting-chaired-by-the-minister




