புதுடெல்லி, தனக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு, தனது பள்ளித் தோழரான பிரதமர் மோடியைச் சந்தித்து 81 வயது முதியவர் மனு அளித்துள்ளார். குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். பள்ளியில் பிரதமர் மோடியுடன் படித்தவர் அஸ்கராலி வோரா. மராட்டியம் மாநிலத்தில் மீரா ரோடு பகுதியில் வசித்து வரும் இவர், 1989-ம் ஆண்டு பயந்தர் கிழக்குப் பகுதியில் 2,810 சதுர மீட்டர் நிலத்தைச் சட்டப்பூர்வமாக விலைக்கு வாங்கினார். எனினும், 2011-ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, பா.ஜனதா எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தாவுடன் தொடர்புடைய நிறுவனங்களால் தனது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக வோரா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக 2015-ல் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வருவாய்த்துறை, போலீஸ் நிலையங்களில் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், கடந்த செப்டம்பர் 8-ந் தேதியன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட்டார். இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் அளித்த நேர்மறையான பதிலால் தனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று அஸ்கராலி வோரா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/81-year-old-school-friend-submits-a-complaint-petition-to-prime-minister-modi




