கோவை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, “தற்போது 23 கட்சிகள் இந்தியாக் கூட்டணியில் தொடர்கின்றன. தவெகவுக்கு எப்போது எம்.பிக்கள் வருகிறார்களோ, அப்போது நாங்கள் அவர்களை இந்தியாக் கூட்டணியில் இணைந்து கொள்ளச் சொல்லுவோம். எம்.பி.க்களே இல்லாத தவெகவை எப்படி இந்தியாக் கூட்டணில் தற்போது சேர்க்க முடியும்? முதல்வர் விஜய் விஜய்யைப் பொறுத்தவரை 106 இடங்கள் கிடைத்ததும், அவரை முதலில் தொடர்புகொண்டு பேசியது ராகுல் காந்தி. தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தியிடம் ஆதரவு கேட்டார் விஜய். Vijay: "இன்றைய CM. வருங்கால PM. முதல்வர் விஜய்தான் வருங்கால பிரதமர்" - அமைச்சர் ஜெகதீஸ்வரி தவெகவின் இன்றைய அமைச்சர்களுக்கு அது நன்றாகத் தெரியும். அவர்கள் அமைச்சர் ஆவதற்கும், ஆட்சி அமைப்பதற்கும் முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் கட்சி. இல்லாவிட்டால், அமித்ஷா தவெக ஆட்சியை வர விடாமல் செய்திருப்பார். மாணிக்கம் தாகூர் கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியிருப்பார்கள். இந்த நிலை அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தல் வரட்டும், விஜய் சரியான முடிவை எடுப்பார்” என்று தெரிவித்திருக்கிறார். "தமிழர்களின் உயிர் அல்பமானது கிடையாது" - கொதிக்கும் ஜோதிமணி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/tn-congress-leader-manickam-tagore-about-tvk-in-india-alliance




