வயநாடு, கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடி பகுதியில் 22.6 செ.மீ., அளவுக்கு அதிகனமழை பெய்த நிலையில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேப்பாடி அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவு இதுவரை மண்ணுக்குள் புதைந்த 6 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். மேலும் சில தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாக கூறப்படும்நிலையில், மீட்புப்பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுரங்க பணி வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். சுரங்க பணிக்காகத் தோண்டப்பட்ட மண் சரிந்து குவிந்துள்ளது. ஒரு வீடும் தேவாலயமும் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. அப்பகுதியில் இருந்த பேருந்து நிறுத்தமும் பாலமும் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. பணியாளர்கள் தங்கியிருந்த அறையில் (கேபினில்) சுமார் 15 பேர் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் வைக்கோல் கூரையிட்ட கடை ஒன்றை நடத்தி வந்த குடும்பத்தினரும் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 6 தொழிலாளர்கள் மேப்பாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அனைவரும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆவர். கட்டுமானப் பணி வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்தது. பாலத்திற்கு அருகிலிருந்த குன்று இடிந்து கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகளும் மண்ணில் புதையுண்டு போயின. நிலச்சரிவைத் தொடர்ந்து, வயநாட்டிற்கு நேரில் செல்லுமாறு அமைச்சர்களுக்கு முதல்-மந்திரி வி.டி.சதீசன் உத்தரவிட்டார். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சித்திக்குடன் முதல்-மந்திரி அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார். மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க கோழிக்கோடு குழுவை வயநாட்டிற்குச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும், வயநாடு மாவட்ட கலெக்டருடன் முதல்-மந்திரி தொலைபேசியில் பேசினார். தற்போது நிலச்சரிவு ஏற்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/6-injured-in-major-wayanad-landslide-minister-calls-it-man-made-disaster




