உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் விசாரணையின்போது கூறிய "கரப்பான் பூச்சிகள்" குறித்த கருத்து, இந்திய இளைஞர்களை குறிவைத்து அல்ல என்றும், போலி சட்டப் பட்டங்களை பயன்படுத்தி சட்டத் தொழிலுக்குள் நுழைந்தவர்களையே குறிப்பிட்டதாகவும் இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: போலி சட்டப் பட்டங்களை வைத்து சிலர் சட்டத் தொழிலில் நுழைந்திருப்பது குறித்து இந்திய பார் கவுன்சிலே ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. அந்த விவகாரத்தின் பின்னணியில்தான் நீதிமன்ற விசாரணையின்போது நான் அந்தக் கருத்தை தெரிவித்தேன். போலி பட்டங்கள் மூலம் பின்வாசல் வழியாக தொழிலுக்குள் நுழைந்தவர்களைப் பற்றியே நான் குறிப்பிட்டேன். சட்டத் துறையை எப்படி சுத்தப்படுத்துவது என்பதுதான் அப்போது விவாதமாக இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/did-not-call-the-youth-cockroaches-chief-justice-clarifies




