திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்த 21 வயதான பூவரசி என்ற இளம்பெண் திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்ஷ்ய் என்ற 25 வயது இளைஞரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், அண்மையில் யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணமும் செய்திருக்கிறார்கள். மகளின் திருமணம் குறித்து அறிந்த தாய் தனலட்சுமி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அக்ஷய் உடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ளும்படி கூறியிருக்கிறார். மேலும், பூவரசி கழுத்தில் இருந்த தாலியையும் அகற்றியிருக்கிறார். பூவரசியைச் சந்திப்பதற்காக திண்டுக்கலிலிருந்து திருப்பூர் வந்த அக்ஷய், தனியார் தங்கும் விடுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி, பூவரசியைச் சந்திக்க கடந்த சில நாள்களாக முயற்சி செய்து வந்திருக்கிறார். பூவரசியின் தந்தை பழனிசாமி இன்று காலை வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டிற்குச் சென்ற அக்ஷய் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டுள்ள அக்ஷய் தொடர் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அக்ஷ்ய் அரிவாளால் பூவரசி மற்றும் அவரின் தாய் தனலட்சுமி ஆகிய இருவரையும் வெட்டியிருக்கிறார். படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்டு பதறிய அக்கம்பக்கத்தினர் அக்ஷயைப் பிடித்து வைத்துள்ளனர். நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இரண்டு உடல்களையும் மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அக்ஷயைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் காதலி மற்றும் அவரின் தாயை பட்டப்பகலில் வீடு புகுந்து வெட்டிக் கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொலை செய்வதை வீடியோ எடுத்த இளைஞர்கள்; ரத்தம் வடிந்த கத்தியை வாயில் வைத்து செல்ஃபி - கோவை அதிர்ச்சி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/in-tiruppur-the-horrific-hacking-to-death-of-both-wife-and-mother-in-law




