வக்பு வாரிய சட்டத்திருத்தம், சிமெண்ட் குடோன்களால் ஏற்படும் காற்று மாசு மற்றும் பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக மும்பையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த போராட்டங்களில் பங்கேற்றதாக சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) அமைப்பை சேர்ந்த பிரோஸ் அப்துல் வஹாப் கான், முகமது ரபிக் குலாம் ரசூல் அன்சாரி ஆகிய 2 மீது போலீசார் 3 வழக்குளை பதிவு செய்தனர். மேலும் அவர்கள் பாபர் மசூதி இடிப்பு தவறு என்று கருத்து தெரிவித்து சமூக பதற்றதை தூண்ட முயன்றதாக கூறி மும்பை நகருக்குள் நுழைய ஓராண்டுக்கு தடை விதித்து மும்பை போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறை யீடு செய்தனர். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார் அடங்கிய தனி அமர்வு, போலீசாரின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.வழக்கு விசாரணையின்போது நீதிபதி கூறியதாவது:- முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/stating-that-the-demolition-of-the-babri-masjid-was-wrong-does-not-amount-to-sedition-says-the-bombay-high-court
