நெல்லை, நெல்லை வழியாக நாகர்கோவில் -கோயம்புத்தூர் இரவுநேர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22667 / 22668) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. இதையடுத்து இந்த ரெயிலில் 1 முதலாம் வகுப்புடன் இணைந்த இரண்ட டுக்கு ஏ.சி. பெட்டி, 1 ஏ.சி. இரண்டுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி கள், 14 தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 4 பொது பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 சரக்கு பெட்டி என மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இந்த தகவலை தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-connection-on-nagercoil-coimbatore-express




