சென்னை, இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர தினத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கு பின்னர் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக முதல்-அமைச்சர் விஜய் முதல்-முறையாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நீண்ட காலத்திற்கு தொடரும். முதல்-அமைச்சர் தனது உரையில் மிகத் தெளிவாக எல்லாவற்றையும் கூறிவிட்டார். மக்கள் தன்னுடன் நிற்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/all-of-tamil-nadu-is-happy-finance-minister-maria-wilsons-interview




