சென்னை, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில், பிரபல சரித்திர பதிவேடு ரவுடி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதிவேடு குற்றவாளி சென்னை புதிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் குமார் (வயது 24). மீனவரான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடி குள்ள கார்த்திக் என்பவரின் நெருங்கிய கூட்டாளியான இவர், காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். அதிர்ச்சி சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நரேஷ் குமார், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் மர்மமான முறையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த நரேஷ் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பழிக்குப்பழியாக நள்ளிரவில் யாராவது இவரை வெட்டிக்கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/history-sheeter-rowdy-naresh-hacked-to-death-at-kasimedu-fishing-harbour




