சென்னை, சென்னையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் ரக்சனா (வயது 17), பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரக்சனாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. தூக்குப்போட்டு தற்கொலை நேற்று முன்தினம், ரக்சனாவின் தாயார் மற்றும் அண்ணன் கடைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த ரக்சனா, மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரக்சனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-college-student-commits-suicide-by-hanging




