சென்னை, காங்கிரஸ் தலை மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; வினாத்தாள் கசிவு விவகாரத்தில் "விரைவு நீதிமன்றங்கள்" அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! அரசு தரவுகளே உண்மையை உடைக்கின்றன: 880 விரைவு நீதிமன்றங்களில் 13.9 லட்சம் வழக்குகள் தேங்கி நிற்கின்றன! One more court ITSC சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் 2025-ல் 2,45,579 ஆக உயர்ந்துள்ளன! தேர்வு முறையையே ஒழுங்காக நடத்தத் தெரியாத முற்றிலும் தோல்வியடைந்த ஒரு அமைப்பு! மாணவர்களின் கோரிக்கை பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் தெளிவானவை: 1. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்க! 2. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! 3. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! வெற்று வாக்குறுதிகளாலும் அடக்குமுறைகளாலும் இந்தியாவின் இளைஞர்களையும் மாணவர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது!” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-prime-ministers-announcement-regarding-the-neet-issue-is-merely-an-eyewashmanickam-tagore




