சென்னை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 2-வது கட்டமாக 750 மின்சார பஸ்கள் வரப்போகிறது. அதில், 80 மின்சார பஸ்கள் ஆகஸ்டு மாதத்திற்குள் ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது பயணிகளுக்கு சொகுசு மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் மின்சார பஸ்கள் இயக்கத்தை தொடங்கியது. அதன்படி, 225 ஏ.சி.பஸ்கள் மற்றும் 400 ஏ.சி. அல்லாத பஸ்கள் என 625 மின்சார பஸ்கள் மொத்த விலை ஒப்பந்தப்படி படிப்படியாக வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்னை சென்டிரல், தண்டையார்பேட்டை என 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்து 2-வது கட்டமாக 550 ஏ.சி. பஸ்கள், 200 ஏ.சி. அல்லாத பஸ்கள் என 750 மின்சார பஸ்களை மொத்த விலை ஒப்பந்தப்படி இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆலந்தூர் பணிமனையில். அதன்படி, அசோக் லைலண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபைலிட்டி நிறுவனம் (ஏற்கனவே மின்சார பஸ்களை இயக்கி கொண்டிருக்கும் நிறுவனம்) 380 ஏ.சி. பஸ்கள், 120 ஏ.சி. அல்லாத பஸ்கள் என மொத்தம் 500 மின்சார பஸ்களை இயக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 170 ஏ.சி. பஸ் கள், 80 ஏ.சி. அல்லாத பஸ்கள் என 250 மின்சார பஸ்களை இயக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 750 மின்சார பஸ்களும் ஆலந்தூர், சென்டிரல்-2, பெரம்பூர், பாடியநல்லூர், அய்யப்பன்தாங்கல், ஆவடி, கே.கே.நகர் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 80 மின்சார பஸ்கள் ஆகஸ்டு மாதத்திற்குள் இயக்கப்பட இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/750-new-electric-buses-for-chennai-preparatory-work-in-full-swing




