சென்னை, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசிக்கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் திடீரென அவரை 'வருங்கால முதல்வர்' என்று உரக்க அழைத்தார். அந்த எதிர்பாராத குரல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பாரம்பரிய உடையில் பங்கேற்ற அவர், ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது. “வருங்கால முதல்வர்” என ரசிகர் குரல் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசிக்கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் திடீரென அவரை 'வருங்கால முதல்வர்' என்று உரக்க அழைத்தார். அந்த எதிர்பாராத குரல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மவுனமாக இருந்த சிவகார்த்திகேயன் அதனை சற்றும் எதிர்பாராத சிவகார்த்திகேயன் வெட்கத்துடன் புன்னகைத்து, வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை காட்டிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது அவரது அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்களை எற்படுத்தவில்லை என்றாலும், ரசிகர்களின் ஆரவாரத்தை அவர் கையாண்ட விதம் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/future-chief-minister-a-voice-from-the-crowd-sivakarthikeyans-reaction




