புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தெருநாய் ஒன்று பொதுமக்களை ஓட ஓட விரட்டி கடித்ததில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெறிநாய் கடியால் படுகாயம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெறி பிடித்த நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது சிறு குழந்தையை, அந்த நாய் கடித்து தாக்கியது. மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை திடீரெனத் தாக்கியது. நாயின் கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும், அந்த நாய் பலரைக் கடித்துக் குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் விராலிமலை அரசு ஆஸ்பத்திரியில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கோரிக்கை விராலிமலை பகுதியில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஆபத்தான முறையில் சுற்றும் தெருநாய்களைப் பிடித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/viralimalai-10-people-including-a-one-and-a-half-year-old-child-injured-in-a-rabid-dog-attack




