கடலூர், கடலூர் அருகே எம். சேன்டு உட்பட கிராவல் மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஒட்டி வந்த 2 ஒட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்தாவது: கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணமின்றி யூனிட் கிராவல் மண் மற்றும் யூனிட் எம். சேன்ட் ஆகியவற்றை லாரிகளில் கடத்தி வந்த லாரிகளையும் பறிமுதல் செய்ததுடன் அதன் ஓட்டுநரை கைது செய்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பாலூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பநாதன் மகன் கணேசமூர்த்தி (26). மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் கோபி (25), ஆகிய ஓட்டுநர்களை கைது செய்தும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-trucks-carrying-sand-seized-near-cuddalore-drivers-arrested




