சென்னை, 2027 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் கேப்டனாக செயல்பட உள்ளதாக வெளியான தகவலை தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் மறுத்துள்ளார். ரிஷப் பண்ட் விலகியதால் எழுந்த கேள்வி 2026 ஐபிஎல் தொடருக்கு பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் லக்னோ அணியில் இணைந்தார். இதையடுத்து, அடுத்த சீசனில் லக்னோ அணியை யார் வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்போது எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. எனக்கு எதுவும் தெரியாது இந்நிலையில், இதுகுறித்து பேசிய எய்டன் மார்க்ரம், "எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. அணி நிர்வாகம்தான் அந்த முடிவை எடுக்கும். எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். யார் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டாலும் சிறப்பாக செயல்படுவார். இதுகுறித்து நான் இதுவரை சிந்திக்கவே இல்லை" என்று தெரிவித்துள்ளார். தி ஹன்ட்ரெட்' தொடரில் கவனம் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'தி ஹன்ட்ரெட்' கிரிக்கெட் தொடரில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் செயல்பட்டு வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/ive-got-no-idea-aiden-markram-on-prospect-of-leading-lsg-next-ipl-season




