செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 4 வீரர்கள் நேரடியாக அரைஇறுதியில் மோதுகிறார்கள். ஒவ்வொரு அரைஇறுதியும் 2 கிளாசிக் கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும். மொத்தம் 28 புள்ளிகள் கொண்ட அரைஇறுதியில் 15 புள்ளிகள் எடுப்பவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார். இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா- ஜெர்மனியின் வின் சென்ட் கீமர் இடையே அரைஇறுதியின் 2-வது சுற்று நடந்தது. வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 55-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அமெரிக்க வீரர்களான பேபியானோ கருணா-வெஸ்லி சோ இடையிலான அரைஇறு தியின் 2-வது ஆட்டம் 50-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. கிளாசிக்கல் ஆட்டம் முடிவில் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையுடன் இறுதிப்போட்டியை நெருங்கியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/grand-chess-tourpraggnanandhaa-wins-the-second-game




