கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெட்டிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இளைஞர் ஒருவர் சாலையின் ஓரத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகளில், சாலை ஓரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் படுத்திருக்கும் நிலையில், சாலையில் நடந்து வந்த நபர், குரைத்து கொண்டு இருந்த நாயை பற்றி அவரிடம் கேட்கின்றார். பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள் பின்னர், நாயை விரட்டி விடும் அந்நபர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சாலை ஒரத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து உள்ளார். அப்போது தெருநாய்கள் விடாமல் குரைத்தபடி இருந்தும், அந்நபர் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட நிலையில், அப்பெண்ணிற்காக தெரு நாய் அந்நபரைப் பார்த்து குரைத்து விரட்டுவதற்குப் போராடுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. நாய்களின் தொடர் தாக்குதலால் பாலியல் வன்கொடுமை செய்ய முடியாமல் அந்நபர், பெண்ணை விட்டுவிட்டு ஓடும் காட்சிகளும், தெரு நாய் அவரை விரட்டி செல்வதும் சிசிடிவி காட்சிகளில் உள்ளது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்தவர் துடியலூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுவனைக் கைது செய்த காவல் துறையினர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ’ரூ.2 லட்சத்தில் கமிஷனருக்கு செல்போன் வாங்குவதா?’ - கோவை மாநகராட்சி சர்ச்சை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/street-dogs-saved-a-woman-from-sexual-assault-in-coimbatore




