இன்று தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு செய்தியாளர்கள் அழைக்கப்படாதது பேசுபொருளானது. இதையடுத்து முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது. "எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், எங்கள் எதிர்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் மற்றும் என்னை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, குறிப்பாகத் தொழில் துறை வளர்ச்சியை விட முக்கியமானது வேறு எதுவுமே இல்லை. நம் மாநிலத்தில் வரக்கூடிய ஒவ்வொரு முதலீடும், அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலையும், உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும் எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. ஆம், ஆட்சியில் எந்தக் கட்சி இருக்கிறது என்பதையெல்லாம் தாண்டி நாங்கள் இதை வரவேற்கிறோம். டி.ஆர்.பி.ராஜாTata Sons-ன் அடுத்த தலைவர் 'இவரா?' - அடிபடும் பேச்சுகள்; தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்? அதனால்தான், இன்று 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறப்படும் உரிமைகோரலில் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவை என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இன்றைய நிகழ்வில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது என்பதே பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது! கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் முதலீட்டு வளர்ச்சியை உலகிற்கு எடுத்துரைப்பதில் சென்னையில் உள்ள தொழில் துறைப் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை இந்த நிகழ்விலிருந்து ஏன் ஒதுக்கி வைத்தீர்கள்? அந்த 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அதிகாரப்பூர்வப் பட்டியலை இதுவரை ஏன் வெளியிடவில்லை? கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, உண்மை நிலைமை தெளிவாகப் புரிகிறது: * முதலீட்டு மதிப்பில் சுமார் 75% மற்றும் வேலைவாய்ப்புகளில் 83% பங்கைக் கொண்டுள்ள கிட்டத்தட்ட 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கங்கள் அல்லது மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட முதலீட்டு முயற்சிகள் என்பது தெளிவாகிறது. * டைட்டன் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு என்பது, டிட்கோ அமைப்பு மூலம் அம்மாநில அரசுடன் அந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே இருக்கும் உறவின் அடிப்படையில் வந்ததாகும். முதலீட்டாளர்கள் மாநாடுசந்திரசேகரன் வெளியேறுகிறார்! டாடா பங்குகள் இனி எப்படி இருக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? * புதியது அல்லது புதிதாக வர வாய்ப்புள்ளது எனக் கருதப்படும் அனைத்து முதலீடுகளையும் நாம் தாராளமாகச் சேர்த்துக்கொண்டால் கூட, அது வெறும் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே! இதன் முதலீட்டு மதிப்பு 23% மற்றும் வேலைவாய்ப்பு 15% மட்டுமே ஆகும். ஒன்றை நான் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்: நிறுவனங்களின் விரிவாக்கம் வரவேற்கத்தக்கது. முன்பு பேசப்பட்ட முதலீடுகள் இப்போது உறுதியாவதும் வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு வேலைவாய்ப்பும் வரவேற்கத்தக்கது. ஆனால், முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே வளர்த்தெடுக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அல்லது அறிவிக்கப்பட்ட ஒரு முதலீடு, ஒரு புதிய மாநாட்டில் காட்சிப்படுத்தப்படுகிறது என்பதற்காக மட்டுமே திடீரென்று 'புதிய சாதனை' ஆகிவிட முடியாது. திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி புதிய உச்சங்களைத் தொட்டிருந்தாலும், மாநிலத்தின் இந்தத் தொழில் வெற்றி என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல. திமுக எப்போதும் இதை மதித்து நடந்துள்ளது. அதனால்தான், நமது பன்முகத் திறமை கொண்ட தொழில் சூழலின் பலத்தையும், நமது தொழிலதிபர்களையும், முதலீட்டாளர்களையும் நாம் எப்போதுமே முன்னிலைப்படுத்திப் போற்றினோம். முந்தைய அரசு ஒரு நல்ல தொழில் சூழலை உருவாக்கி, முதலீட்டாளர்களை ஈர்த்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, திட்டங்களை வளர்த்தெடுத்து நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய வழிவகுத்தது. There is nothing more important to my leader our LoP and me than ’s overall growth and especially industrial growth. Every investment, every factory, every job created in our state makes us happy. Yes, irrespective of which govt is in place.… — Dr. T R B Rajaa (@TRBRajaa) August 13, 2026 தற்போதைய அரசு புதிதாக என்ன கொண்டுவருகிறது என்பதைக் கொண்டும், உண்மையில் எதைச் செய்து முடிக்கிறது என்பதைக் கொண்டும் மட்டுமே நியாயமாக மதிப்பிடப்பட வேண்டும். அதனால்தான், இந்திய தொழில் முனைவோர் சங்கம் இன்று எழுப்பியுள்ள கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் > முதலீடு > உற்பத்தி > வேலைவாய்ப்புகள் > குரு, சிறு & நடுத்தரத் தொழில் (MSME) வாய்ப்புகள். குரு, சிறு & நடுத்தரத் தொழில் (MSME) அளவில் உருவாகும் வேலைவாய்ப்புகள். வேலைவாய்ப்புகள். வேலைவாய்ப்புகள். அதுவே உண்மையான அளவுகோல். இன்று கையெழுத்தான நிறுவனங்களின் பட்டியலைப் பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக வெளியிடுங்கள். அவர்கள் அதை பரிசீலிக்கட்டும். அதில் எது உண்மையில் புதியது, எது நிறுவன விரிவாக்கம், எது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதை மக்கள் அறிந்துகொள்ளட்டும். விளம்பரங்களில் சொல்வது போல எண்கள் உண்மையிலேயே பிரம்மாண்டமானவை என்றால், இந்த வெளிப்படைத்தன்மை அந்தச் சாதனையை இன்னும் பலப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது. தமிழ்நாட்டிற்கு உண்மையைத் தெரிந்துகொள்ளும் உரிமை உண்டு. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எப்போதும் நம்பிக்கையோடு இருப்போம்!" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/trb-rajaa-questions-transparency-at-tvks-first-investors-meet




