சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முக்கியமான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்து மேலும், ராணுவ ஒத்துழைப்பு, கூட்டுப் பயிற்சிகள், உளவுத்துறை தகவல் பரிமாற்றம், பாதுகாப்பு தொழில்நுட்ப பகிர்வு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படவும் மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சொல்வது என்ன? ஈரான் தொடர்பான மோதல்கள், வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு நோக்கத்திற்கானது என்றும், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் சம்பந்தப்பட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியாவின் பொருளாதார வலிமை, துருக்கியின் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் பாகிஸ்தானின் ராணுவ திறன் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/attack-on-one-attack-on-all-pak-saudi-turkey-sign-key-defence-pact




