திருப்பத்தூர், பெற்ற தாயும் தந்தையும் காலில் விழுந்து கதறி அழுதும், அவர்களைச் சற்றும் கண்டுகொள்ளாமல் 3 ஆண்டு காதலனுடன் செல்வதிலேயே பிடிவாதமாக இருந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவியால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி லாரிசெட் பகுதியை சேர்ந்தவர் காளி. இவரது மனைவி பிரவீனா. இந்த தம்பதியின் மகள் திவ்யதர்ஷினி (வயது 19). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். காதல் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் பெருமாள் (23). இவர் அந்த பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், திவ்யதர்ஷினிக்கும் வாலிபர் பெருமாளுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் தீராத காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. கோவிலில் நேற்று திருமணம் வாலிபர் பெருமாளின் காதலை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மகளை கண்டித்து வீட்டு காவலில் வைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி, தங்களை பிரித்துவிடுவார்களோ என்ற பயத்தில் வீட்டை விட்டு வெளியேறிவர்கர்கள் ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் நேற்று திருமணம் சய்து கொண்டனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று காலை தஞ்சம் அடைந்தனர். காலில் விழுந்து பெற்றோர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மாணவியின் பெற்றோர் பதறியடித்தபடி காவல் நிலையத்திற்கு ஓடி வந்தனர். அங்கு தன் மகள் திவ்யதர்ஷினி காதலனுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த பெற்றோர், அதிர்ச்சியில் உறைந்தனர். அதனை தொடர்ந்து, திவ்யதர்சினியின் காலில் விழுந்து அவரது பெற்றோர் இருவரும், எங்களோடு வீட்டிற்கு வா, எங்களை அநாதையாக விட்டுவிட்டு போகாதே என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும், மகளின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு தங்களுடன் வருமாறு கெஞ்சினர். வாக்குவாதம் இதனால் காவல் நிலைய வளாகத்திற்குள் பெரும் சலசலப்பும், காரசாரமான வாக்குவாதமும் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட போலீசார், பெற்றோரை கட்டாயப்படுத்திச் சமாதானம் செய்து, காவல் நிலையத்தை விட்டு பலவந்தமாக வெளியே அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடத்தை சரியில்லை இதில், ஆத்திரமடைந்த திவ்யதர்ஷினியின் பெற்றோர் போலீஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் திடீரென உருண்டு அழுதனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. அப்போது திவ்யதர்சனின் தந்தை காளி கூறுகையில்:- பெருமாளின் நடத்தை சரியில்லை. அதுமட்டுமின்றி ஊரில் கேட்கும் போது ஒருவர் கூட பெருமாளை பற்றி நல்ல விதமாக சொல்லவில்லை. கண்கலங்க செய்தது எனது மகளை தயவுசெய்து மீட்டு என்னுடன் அனுப்புங்கள் என கெஞ்சியபடி கதறி அழுதார். இந்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது. இதைத்தொடர்ந்து, காதல் திருமணம் செய்து கொண்ட மாணவி கதலனுடன் செல்வதாக கூறியதால் அவருடன் அனுப்பி வைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/sensation-in-tirupathur-parents-fell-at-her-feet-and-wept-bitterly-student-left-insisting-she-wanted-only-her-lover




