மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல் வாக்குப்பதிவு குறித்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர், நாக்பூரில் படித்த மக்கள் வாழும் வசதியான பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வாக்குகள் கிடைப்பதாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி மற்றும் சிவப்பு விளக்குப் பகுதிகள் உள்ள இடங்களில் 92% வாக்குகள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். நிதின் கட்கரி இதுதொடர்பாக பேசிய அவர், "அரசியலில் அனைத்து விதமான அனுபவங்களையும் நான் கடந்துவந்துவிட்டேன். இந்தப் புள்ளிவிவரங்களை வைத்து தனக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இடையே தனிப்பட்ட தொடர்போ அல்லது அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவோ இருப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. Vijay: "வீட்ல என்னை Meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?" - வீடியோ வெளியிட்ட ஸ்டாலின் அப்பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள், கட்டமைப்புப் பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாகவே அங்கிருந்த வாக்காளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். நிதின் கட்கரி வாக்காளர்கள் மிகவும் விவேகமானவர்கள். அவர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்டாலும், தங்களுக்கு உண்மையாக உழைக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். கடந்தக்கால தேர்தல் ஒன்றில் வாக்காளர்களுக்குத் தலா 1 கிலோ ஆட்டிறைச்சி வழங்கிப் பிரச்சாரம் செய்த போதிலும், அந்தத் தேர்தலில் நான் தோல்வியைத் தழுவினேன்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/nitin-gadkari-says-he-got-99-of-votes-from-nagpurs-underworld-red-light-areas




