சென்னை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளநிலையில், கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கை பாதையில் தொடர்ந்து முன்னேறிச செல்வோம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது:- தமிழினத்தின் உரிமைக் குரலாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகம், கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை. “ஆட்சி வரும், போகும்; அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!” என்ற தலைவர் கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கைப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-victory-the-dmk-has-not-witnessed-nor-any-defeat-it-has-not-faced-kanimozhi




