சென்னை, மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தாலும் இங்கிலாந்து கேப்டன் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். இறுதிப்போட்டி 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, கேப்டன் நாட் சிவர்-பிரண்டின் பொறுப்பான ஆட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. சிவர்-பிரண்ட் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் குவித்தார். இதையடுத்து 151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா, 17.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7-வது மகளிர் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. அந்த அணியின் பெத் மூனி 64 ரன்கள் குவித்தார். சாதனை படைத்த கேப்டன் இங்கிலாந்து அணி ரன்னர்-அப் பட்டத்துடன் தொடரை நிறைவு செய்தாலும், கேப்டன் நாட் சிவர்-பிரண்ட் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆகிய இரு நாக்-அவுட் ஆட்டங்களிலும் அரைசதம் அடித்த முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவுடனாக அரையிறுதி ஆட்டத்தில் நாட் சிவர்-பிரண்ட் 75 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/womens-t20-wc-we-were-outplayed-by-a-class-australian-side-says-sciver-brunt-after-england-loss




