திருச்செந்தூர், ஆடி கொடை விழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக ஆடி கொடை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆடி கொடை விழா ஆகஸ்டு 3-ந் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்குத் தென்காசி சத்யா - செல்வின் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறப்பு அபிஷேகம் அடுத்த நாள் (ஆகஸ்டு 4) காலை 6, காலை 8, மாலை 5, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு அபிஷேகங்களும், காலை 10 மணிக்கு கும்பம் வீதி உலாவும் நடைபெறும். மதியம் 12, இரவு 7 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்குச் சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணிக்குக் கும்பம் திருவீதி உலாவும் நடைபெறும். ஆகஸ்டு 5-ந் தேதி காலை 8, பகல் 12 மணிக்கு அன்னதானமும், காலை 11 மணிக்குக் கும்பம் வீதி உலாவும், காலை 11.30 மணிக்கு வில்லிசையும் நடைபெறும். மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 8.30 மணிக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், இரவு 9 மணிக்குச் சிறப்பு மகுடமும் நடைபெறும். தசரா திருவிழா எப்போது? திருவிழாவை முன்னிட்டுக் காலை முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்களின் வசதிக்காகத் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா வரும் அக்டோபர் மாதம் 11-ந் தேதி அதிகாலை 5 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடும் மகிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் 20-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/kulasekharanpattinam-mutharamman-temple-aadi-kodai-festival-begins-on-august-3




