தூத்துக்குடியில் கடந்த 18 ஆம் தேதி தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது, "சட்டமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் உன் அப்பாவை என்று சொல்கிறானே, நான் கேட்கிறேன். மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் (விஜய்), உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறோம். மார்க்கண்டேயன் நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? சட்டமன்றத்தைக் கூட்டும்போது உனக்கு எலும்பு இருக்காது, உடைத்து விட்டுதான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தைக் கூட்டிப் பார். யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து கேராவனில் யாரை வைத்துக்கொண்டு நீ ஓடினாய்?" என்று பேசியிருந்தார். "There Will Be Consequences."- திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்! முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதால் விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். இதற்கு திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் மார்க்கண்டேயன் கைது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது ஆதவ் அர்ஜுனா கூடத்தான் எங்கள் முதல்வரை முட்டாள் என்று விமர்சித்திருந்தார். நாங்கள் கைது செய்தோமா? அனிதா ராதாகிருஷ்ணன் கரூரில் 42 உயிர்கள் பறிபோனபோது விமான நிலையத்தை நோக்கி விஜய் ஓடினாரே அப்போது நாங்கள் கைது செய்தோமா? மார்க்கண்டேயன் சாதாரணமாக பொதுக்கூட்டத்தில் பேசியதை விசாரிக்காமல், எந்த முன் அறிவிப்புமின்றி கைது செய்திருக்கிறார்கள். இது நாடா? காடா? இது ரொம்ப நாள் நீடிக்காது. அதிகபட்சம் நான்கு மாதங்கள் இந்த ஆட்சி இருக்கும்" என்றார். தொடர்ந்து பேசிய கீதா ஜீவன், "தவறு செய்யும் தவெக நிர்வாகிகளைக் கைது செய்ய மறுக்கிறார்கள். அவர்களுக்கு வந்தால் ரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். `சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சு' விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது - பின்னணி என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/anitha-radhakrishnan-geetha-jeevan-condemns-markandeyan-arrest




