சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகிய நகரங்களுக்கு இடையேயான இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை இன்று நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்று பெருமை ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலானது, முழுக்க முழுக்க சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் -இல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தமிழகத்திற்கான வரலாற்று பெருமை. “சுயசார்பு இந்தியா” எனும் நமது இலக்கை மேலும் வலுவாக்கும் வகையிலான, நமது பாரதப் பிரதமரின் இத்தகைய முன்னெடுப்பு, நமது நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் புத்தி மைல்கல்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-congratulates-prime-minister-modi-on-launching-hydrogen-train-service




