தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி சரவணன். இவர் மனைவி அம்சா (35) மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6), மகன் குமரன் (3) ஆகியோர் கடந்த 19 ஆம் தேதி பிற்பகலில் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர். இவர்களைக் காணாமல் பல இடங்களில் உறவினர்கள் தேடியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இவரது வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகிலுள்ள அம்சாவின் தந்தை நிலத்திலுள்ள கிணற்றில் அம்சாவும் குழந்தைகளும் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. அம்சா தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக குழந்தைகளுடன் அம்சா வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிய வந்துள்ளது. அவர்களது உடல்களில் கயிற்றால் கற்களும் கட்டப்பட்டிருந்ததாலும், இரண்டு நாள்களுக்குப் பின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாலும் இது கொலையா? தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/children-and-mother-suspecious-death-in-dharmapuri-police-investigation-goes-on




