கொழும்பு, இலங்கையின் மத்திய மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மலைப்பாங்கான பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 7 பேர் பலி இந்நிலையில், இலங்கையில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/heavy-rain-and-floods-in-sri-lanka-7-killed




