மாட்ரிட், உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 4) போட்டி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் சுரேகா வென் னம், பிரித்திகா பிரதீப், சிகிதா தனிபார்தி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 228-232 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. முக்கிய தருணத்தில் இந்திய வீராங்கனைகள் சொதப்பியது தோல்விக்கு வழிவகுத்தது. பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பிரித்திகா அரையிறுதிக்கு முன்னேறினார். இதேபோல் பெண்களுக்கான ரிகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனை கீர்த்தி ஷர்மா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/archery-world-cup-indian-team-wins-silver-medal




