காவிரி நீர் விவகாரம் மற்றும் கர்நாடகத்தின் நலன் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு- கர்நாடகா எல்லையை மூடும் போராட்டம் நாளை நடைபெற உள்ளதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். நாளை காலை 11 மணிக்கு அத்திப்பள்ளி எல்லையில் போராட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.இதனால் கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தின் நிலைப்பாட்டை கண்டித்து, அத்திப்பள்ளி–ஓசூர் எல்லையில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. அந்தப் போராட்டத்தின்போதும் எல்லைப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், காவிரி நீர் பங்கீடு, பெலகாவியை கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்க வேண்டும், மகாதாயி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 13-ந்தேதி கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கும் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/vatal-calls-for-closure-of-karnataka-tn-border-at-attibele-on-monday




