லண்டன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு குறித்து தொடர்ந்து வெளியாகும் வதந்திகள் தன்னை எந்த வகையிலும் பாதிக்காது என்றும், அவற்றுக்கு பதில் சொல்லுவதை விட களத்தில் ரன்கள் குவிப்பதிலேயே தனது முழு கவனம் இருப்பதாகவும் இந்திய அணியின் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தோல்வி நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக 138 ரன்கள் விளாசினார். இருப்பினும், 388 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 2-1 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது. வதந்திகள் தொடரும் போட்டிக்குப் பிறகு ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த ரோகித், "நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நாளிலிருந்தே இதுபோன்ற சலசலப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் விளையாடும் வரை இந்த வதந்திகள் தொடரும். அதைப் பற்றி நான் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. களத்தில் நான் என்ன செய்கிறேன், அணியின் வெற்றிக்கு எப்படி பங்களிக்கிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம். வெளியே சலசலப்புகள் இருக்கட்டும், அது இல்லையென்றால் சுவாரசியமே இருக்காது," என்று கூறினார். மகிழ்ச்சியான அனுபவம் விராட் கோலியுடன் மீண்டும் இணைந்து பேட்டிங் செய்தது குறித்து பேசிய அவர், "நானும் கோலியும் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒன்றாகவே விளையாடியுள்ளோம். அவருடன் களத்தில் பேட்டிங் செய்வது எப்போதும் மகிழ்ச்சியான அனுபவம். இருவருக்கும் இடையே சிறந்த புரிதல் இருப்பதால், ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டு விளையாடுவது மிகவும் சுவாரசியமாக இருக்கும்," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/if-theres-no-noise-theres-no-fun-rohit-unfazed-by-retirement-talk




