சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரேநாளில் இரு முறை மாற்றம் கண்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை காலை, மாலை என ஒரே நாளில் இருமுறை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,400-க்கும் விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,700-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.13,700-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/todays-gold-price-status-04072026




