ஜகார்த்தா, இந்தோனேசியாவில் அனக் கிரக்டாவ் எரிமலை வெடிப்புச் சம்பவத்தை நேரில் படம் பிடிக்க, காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 5 புகைப்படப் பத்திரிகையாளர்கள், 2 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உள்பட 8 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை மாலை எரிமலைப் பகுதியை அடைந்துவிட்டதாக அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பிறகு, இதுவரை அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. காணாமல் போனவர்கள் முன்னணி செய்தி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஏற்கனவே இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில், நடுக் கடலில் மாயமான பத்திரிகையாளர்களைத் தேடும் பணியில் இந்தோனேசிய கட லோரப் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/volcanic-eruption-in-indonesia-8-people-who-went-to-film-it-are-missing




