சென்னை, சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்துள்ள மனுவில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 30-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை இருசக்கர வாகனத்தில் மாநிலம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்ள முடிவு செய்தோம். இதற்காக அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தோம். அவர், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் மனு அளித்து அனுமதி பெற்றுக்கொள்ளும்படி கடந்த மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டார். இதன்படி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால், அனுமதி மறுத்து ஜூலை 29-ந்தேதி போலீசார் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகளை ரத்து செய்து, பிரசாரத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுவுக்கு பதில் அளிக்கும்படி டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-denied-for-dravidar-kazhagams-two-wheeler-rally-high-court-orders-dgp-to-respond




