புதுடெல்லி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரை 20 அணிகளில் இருந்து 24 அணிகளாக விரிவுபடுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றம் 2028க்கு பிறகு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் டி20 உலகக் கோப்பையை 32 அணிகள் பங்கேற்கும் தொடராக மாற்றவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மேலும் பல அசோசியேட் நாடுகளுக்கு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், 2024 மற்றும் 2026 தொடர்களில் 20 அணிகள் பங்கேற்றன. தற்போது 24 அணிகளாக விரிவாக்கும் யோசனை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/t20-world-cup-icc-plans-to-expand-to-24-teams




