மும்பை, இந்திய டி20 அணியின் துணை கேப்டனும், இளம் நட்சத்திர பேட்டருமான திலக் வர்மா, துலீப் டிராபி 2026 தொடருக்கான தெற்கு மண்டல அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 23 முதல் தொடங்கும் துலீப் டிராபி துலீப் டிராபி 2026 தொடர் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 10 வரை பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய தெற்கு மண்டல அணி, இந்த முறை நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், குவாட்டர் பைனலில் வெற்றி பெறும் அணியை தெற்கு மண்டல அணி எதிர்கொள்ள உள்ளது. திலக் வர்மாவுக்கு புதிய பொறுப்பு இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் திலக் வர்மாவுக்கு தற்போது தெற்கு மண்டல அணியின் கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் இணைந்த அணி தெற்கு மண்டல அணியில் அனுபவம் வாய்ந்த கருண் நாயர், என். ஜெகதீசன், ஸ்ரேயாஸ் கோபால் உள்ளிட்டோருடன், ரிக்கி புய், ஷேக் ரஷீத், ஆர். ஸ்மரன், வித்வத் காவேரப்பா போன்ற இளம் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். தெற்கு மண்டல அணி: திலக் வர்மா (கேப்டன்), ரிக்கி புய், அபினவ் தேஜ்ரானா, ஷேக் ரஷீத், கே.எம். ஹிமதேஜா, ஆர். ஸ்மரன், என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், தனய் தியாகராஜன், ஸ்ரேயாஸ் கோபால், கே. சாய் தேஜா, டி. விஜய், வித்வத் காவேரப்பா, எம்.டி. நிதீஷ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/good-news-tilak-verma-gets-captaincy-responsibilities-official-announcement-released




