சென்னை, தமிழ்நாட்டில் பல்வேறு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அச்சு மற்றும் எழுதுபொருள் துறையின் ஆணையராக சரவண செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் ஆணையராக அஜய் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை இயக்குநராக சிவராசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக சிவநந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டான்சி நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன முதன்மைச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கனிமவள நிறுவன நிர்வாக இயக்குநராக கந்தசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக கவிதா ராமு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/transfer-of-senior-ias-officers-in-tamil-nadu-government-order




