மதுரை, மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அனைத்து பற்களும் விழுந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஏற்பட்ட விரக்தியில தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைத்து பற்களும் விழுந்ததால் முதியவர் அவதி மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 60). இவருடைய அனைத்து பற்களும் விழுந்ததாகவும், அதனால் சரியாக உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தூக்குப்போட்டு தற்கொலை மேலும் அவருக்கு உடல்நலக்குறைவு இருந்ததாகவும் தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-elderly-man-commits-suicide-by-hanging-himself-in-despair-after-losing-teeth




