சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- நேற்று மதியம் 2:30 மணிக்கு அப்புறம் பாஜக 'Eco-system'க்கு திடீர் விழிப்பு வந்துடுச்சோ? முன்னாள் கல்வி அமைச்சர்2:30அது பண்ணாரு, இது பண்ணாருன்னு "சீர்திருத்த" புராணம் பாடுறவங்க. மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடியபோது எங்க போனாங்க? மாணவர்களுக்கு தர்மேந்திர பிரதான் அது பண்ணாரு, இது பண்ணாருன்னு "சீர்திருத்த" புராணம் பாடுறவங்க. மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடியபோது எங்க போனாங்க? மாணவர்கள் குரலை நசுக்குவதும், பதவி தப்பியதும் முட்டுக்கொடுப்பதும் தான் பாஜகவின் 'System' - அரசு அதிகாரமும் கல்வி அமைப்பும் தங்களின் 'தனிச்சொத்து' என்று ஆளும் பாஜக நினைக்கலாம், ஆனால் அது மக்களுக்கானது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமானது! மாணவர் போராட்டம் வீதியில் இறங்கிப் போராடிய இந்திய இளைஞர்கள், மோடி அரசுக்கு அந்த நிதர்சனமான உண்மையை கண்ணாடியாக நின்று சுட்டிக்காட்டிவிட்டார்கள். அதிகார போதைக்கு மக்கள் சக்தி தான் பதில்! மாணவர் போராட்டம் என்ற கண்ணாடியில் மோடி அரசின் சர்வாதிகார முகம் தோலுரிக்கப்பட்டுவிட்டது. இளைஞர்கள் விழித்துக்கொண்டார்கள், மோடி அரசே. உங்கள் போலி முட்டுகளுக்கு இனி வேலை இல்லை! இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களுக்காக உங்கள் 'Eco-system' நிற்கவில்லை, எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் களத்தில் நின்றார். அதனால்தான் தைரியமாகச் சொல்கிறார்: "மோடி இந்தியாவின் கடந்த காலம், கடந்த காலத்தால் ஒருபோதும் எதிர்காலத்தை எதிர்த்துப் போராட முடியாது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-modi-governments-authoritarian-face-has-been-exposed-in-the-mirror-of-student-protests-manickam-tagore




