டோக்கியோவில் இன்று (ஜூலை 19, 2026) நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார். இன்றைய போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சி உடன் மோதினார் சிந்து. தனது சூப்பரான ஆட்டத்தின் மூலம் 21-17, 21-17 என்ற கணக்கில் தனது முதல் 'சூப்பர் 750' பட்டத்தைப் பெற்றுள்ளார் சிந்து. சிந்து வெற்றி இந்த வெற்றி மூலம் ஜப்பான் ஓபன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்கிற பெருமையும் சிந்துவை சேர்கிறது. இன்று சிந்து யாமகுச்சியை வீழ்த்தியது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த நான்கு ஆண்டுகளில் முழுமையாக நடந்து முடிந்த போட்டிகளில் யாமகுச்சியை சிந்து வீழ்த்தியதே இல்லை. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசிய ஓபனில் இவர்கள் மோதிய ஆட்டத்தில், முதல் கேமிற்குப் பிறகு யாமகுச்சி காயம் காரணமாக விலகியதால் சிந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிந்து பெறும் முதல் வெற்றி இது. மேலும், 2019 உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்குப் பிறகு அவர் வெல்லும் மிகப்பெரிய பட்டமாகவும் இது அமைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://sports.vikatan.com/pv-sindhu-wins-japan-open-2026-clinches-maiden-super-750-title




