இணைய வசதி இல்லாமலேயே ஆப்லைனில் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்தும் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவைகளை போன்பே அதிகாரப்பூர்வமாக வழங்குகிறது. இந்தியாவில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான இணையவசதி இல்லாத போன் பயனர்களுக்காக, போன்பே நிறுவனம் 'போன்பே யு.பி.ஐ. 123பே' என்ற சிறப்பு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போனில் உள்ள குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பரிவர்த்தனை தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக குறியாக்கம் செய்யப்பட்டு, சாதாரண செல்போன்களுக்கு நெட்வொர்க் வழியாக அனுப்பப்படும். எனவே, 2ஜி சிக்னல் மட்டுமே உள்ள கிராமப்புறங்களிலும் இது தடையின்றி வேலை செய்யும். மொபைல் எண் அல்லது யு.பி.ஐ. ஐ.டி. மூலம் பணம் அனுப்பலாம், வங்கி கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். மேலும், கேமரா வசதி கொண்ட பட்டன் போன் களில் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம். ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரையிலும், ஒரு நாளைக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் வரையிலும் பணம் அனுப்ப முடியும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/business/upi-transactions-on-phones-without-internet-access




