கோவை, மதுரை அருகே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில்(எண்: 16731) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- மதுரை அருகே ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் (எண்: 16731) வருகிற 15, 18, 21, 24, 27, 31 ஆகிய தேதிகளில் வாஞ்சி மணியாச்சி-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் 10-ந் தேதி பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் (எண்: 16731) மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம் நிலையங்களுக்கு செல்லாமல் மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/palakkad-tiruchendur-train-partially-cancelled




