சென்னை, சென்னையில் உள்ள இந்திய பாதுகாப்புப் பொறியியல் சேவை (IDSE) அதிகாரிகள், இச்சேவையின் 77-வது நிறுவன நாளை கொண்டாடினர். இச்சேவையானது, இந்திய ராணுவப் பொறியியல் சேவையின் (MES) கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு சிவில் பணியாளர் பிரிவாகும். கட்டமைப்பு வசதி ராணுவப் பொறியியல் சென்னை பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் ஈஸ்வர் தத் இந்நிகழ்ச்சியில் பேசுகையில், பொறியியல் திறன், சிறந்த தலைமைத்துவம், பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்புமிக்க சேவை ஆகிய பெருமைமிக்க பாரம்பரியத்தை இந்திய பாதுகாப்புப் பொறியியல் சேவை (IDSE) தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது என்றார். பொறியியல் நடைமுறை 2047-க்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முன்னேறி வரும் நிலையில், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற உள்கட்டமைப்பை உருவாக்கவும், ஆயுதப் படைகளின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐ டி எஸ் ஈ அதிகாரிகள் மேம்பட்ட தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பொறியியல் நடைமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அனைத்து ஐ டி எஸ் ஈ அதிகாரிகளுக்கும், குடும்பத்தினருக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இச்சேவை தனது சிறந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, தேசக் கட்டமைப்புப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/77th-anniversary-celebration-of-indian-defence-engineering-service-in-chennai




