நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது. ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பிடிக்கவில்லை. இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், "அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் 1 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் உலகிலேயே மிகச்சிறந்த கடன் தகுதி கொண்ட நாடு அமெரிக்காதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. புதிய முதலீடுகளால் நம் நாடு அசுர வளர்ச்சி கண்டு வருகிறது! பெரும்பாலான நாடுகளுடன் நமக்கு வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. ட்ரம்ப் பதிவு"உங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், செல்வாக்கும் தகுதியானதே!" - மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து அந்த நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்தினாலே, ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 1.5 டிரில்லியன் டாலர்களைச் சம்பாதிக்க முடியும். 'பற்றாக்குறை' என்ற சொல் நஷ்டம் என்பதற்கான ஒரு கவர்ச்சியான வார்த்தை தவிர வேறொன்றுமில்லை. உலகின் ஏறத்தாழ ஒவ்வொரு நாட்டையுமே நாம் தான் சுமந்து கொண்டிருக்கிறோம். இதை இனிமேலும் தொடர முடியாது. அமெரிக்காவிற்கான வட்டி விகிதங்களைக் குறையுங்கள். அதுவும் உடனடியாகக் குறையுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/trump-calls-for-us-interest-rates-to-fall-to-1-or-lower




