கரூர், கரூர் மாவட்டம் நிலத்தின் சிட்டா நகல் வழங்க லஞ்சமாக மீன் வறுவல் மற்றும் குழம்பு பார்சல் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் ஒருவரை கரூர் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. சிட்டா நகல் கேட்டு விண்ணப்பம் கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவுக்குட்பட்ட தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வங்கிக் கடன் பெறுவதற்காக தன் நிலத்தின் 'சிட்டா' நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். லஞ்சம் விண்ணப்பம் குறித்து பேசுவதற்காக விவசாயியை மொபைல் மூலம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) கார்த்திக் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனில் பேசியது விவசாயியின் மகன் என்று தெரியாமல், "பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பிரண்ட்ஸ் ஹோட்டலில் இருந்து 2 மீன் வறுவல், தனியாக குழம்பு பார்சல் வாங்கி வா" என்று கார்த்திக் லஞ்சமாக கேட்டுள்ளார். வைரலான ஆடியோ விஏஓ -வின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயியின் மகன், "அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா?" என்று கார்த்திக்கை நோக்கி கேள்வி எழுப்பியதுடன், அந்த முழு உரையாடலையும் ஆடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியது. அதிரடி நடவடிக்கை இந்த வினோதமான லஞ்ச விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, குளித்தலை சப்-கலெக்டர் சேஷத்ரி அவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-village-administrative-officer-suspended-after-demanding-fish-fry-and-fish-curry-for-lunch



